பெரியகுளம் பகுதிகளில் உடம்பில் தேசிய கொடியுடன் சுற்றித் திரியும் நாய்.
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதிகளில் உடம்பில் தேசிய கொடியுடன் சுற்றித் திரியும் நாய். நாயின் உடம்பில் தேசியக்கொடிையை கட்டிய மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும்சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதில் உள்ள காயிதே மில்லத் நகர் பகுதியில் தெருவில் சுற்றித் திரியும் நாயின் உடம்பில் தேசியக் கொடியை மர்ம நபர் கட்டி விட்டுதால் பெரியகுளம் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
மேலும் தேசியக்கொடி புனிதமாக கருந்தும் இந்திய மக்களின் எண்ணங்களை இழிவுபடுத்தும் வகையில் மர்ம நபர் இவ்வாறான செயலில் ஈடுபட்டு இருப்பது பெரியகுளம் பகுதியில் உள்ள பொதுமக்கள் இடையே மன வருத்தத்தை வேதனையையும் ஏற்படுத்தி வருகின்றது
இவ்வாறு தவறுகள் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் கோரிக்கை..
CATEGORIES தேனி