BREAKING NEWS

பாளையங்கோட்டை பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து விசாரணை.

பாளையங்கோட்டை பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து விசாரணை.

செய்தியாளர் சங்கர நாராயணன்.

திருநெல்வேலி மாநகர் மற்றும் பாளையங்கோட்டை பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் அதிகளவில் திருடு போவதாக புகார் வந்தது.

 

இதனையடுத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர ரோந்து பணி மேற் கொள்ளப்பட்டது. இதில் நெல்லை கருப்பந்துறை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற சிலம்பரசன், முத்துக்குமார் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

 

அதில் நெல்லை சந்திப்பு, டவுன், பாளை, தச்சநல்லூர் பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர் திருட்டில் ஈடுப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து டவுன் போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 7 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். இந்த திருட்டு சம்பவங்களில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? எனவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

CATEGORIES
TAGS