கோவில்பட்டியில் மதிமுக மாவட்ட கழக சார்பில் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்
திராவிட இயக்கங்களின் கொள்கையில் குழி தோண்டி புதைத்து சனாதான தத்துவங்களை சித்தாந்தங்களை தமிழகத்தில் புகுத்துவதற்கு பாஜகவினர் அலைந்து கொண்டிருக்கிறார்கள் – பாஜக கூட இருந்தே குழி பறித்துக் கொண்டிருக்கிறது இதை அதிமுகவினர் உணர வேண்டும் கோவில்பட்டியில் துரை வைகோ பேட்டி..
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து மதிமுக மாவட்ட கழக சார்பில் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மதிமுக தலைமை கழக செயலாளர் துறை வைகோ கலந்து கொண்டு விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் துணைப் பொதுச் செயலாளர் இ.மு.ராஜேந்திரன் மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ் ரமேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயகர், நகரச் செயலாளர் பால்ராஜ்,மத்திய பகுதி ஒன்றிய செயலாளர் சரவணன், உள்ளிட்ட விவசாயிகள்,மதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மதிமுக தலைமை கழக செயலாளர் துறை வைகோ செய்தியாளரிடம் கூறுகையில்:
பரந்தூர் விமான நிலையம் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக கிராம மக்களிடம் கருத்து கேட்டு விவசாய நிலங்கள் பாதிப்பு ஏற்படாதவாறு அமைக்கபடும் மாநில அரசு விளக்கம் கொடுத்துள்ளது. செண்பகா நதி அணைக்கட்டு திட்டம் நீண்ட கால பிரச்சினை தீர்வு காண மதிமுக சார்பில் தமிழக அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்கப்படும்.
விலை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை தடுக்க நிரந்தர தீர்வு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் அட்டவணையில் மூன்றிலிருந்து ஐந்துக்கு மாற்றினால் மட்டுமே இந்த காட்டுப் பள்ளிகளின் நடமாட்டத்தை தடுக்க முடியும். பெட்ரோல் டீசல் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணம் ஒன்றிய அரசுதான்.
ஆளும் பாஜக மாநிலத்தில் பெட்ரோல் டீசல் விலை குறைவாக இருக்கிறது என்று அண்ணாமலை கூறி வருவது ஊரை ஏமாற்றுவது தான் அவருடைய வேலை. பாஜக ஆளும் மாநிலத்தில் ஊழல் இல்லையா வாரிசு அரசு இல்லையா கண்ணாடி கூண்டுக்குள் இருந்து கொண்டு கள் எறிய கூடாது. 70 வருடமாக திராவிட இயக்கங்கள் பொய்யை விதைத்து மக்களை ஏமாற்றி வருவதாக அண்ணாமலை கூறி வருகிறார்.
திராவிட இயக்கங்களின் கொள்கையில் குழி தோண்டி புதைத்து சனாதான தத்துவங்களை சித்தாந்தங்களை தமிழகத்தில் பூத்துவதற்கு பாஜக அலைந்து கொண்டிருக்கிறார்கள் பாஜக கூட இருந்தே குழி பறித்துக் கொண்டிருக்கிறது இதை அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் உணர வேண்டும்.
பாஜகவின் சனாதான சக்திகளை தமிழகத்தில் இருந்து வேரோடு அகற்று வதற்கு திமுக மதிமுக மட்டும் அந்த கடமை இல்லை அதிமுகவிற்கும் இருக்கிறது. மதுவிலக்கு கொள்கை என்பது எங்களுடைய கட்சியின் முக்கியமான கொள்கை அது தொடர்பாக தமிழரசுக்கு உரிய அழுத்தம் கொடுப்போம்.