BREAKING NEWS

ரூபாய் 10 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கத்தை கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

ரூபாய் 10 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கத்தை கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.

 

கோவில்பட்டி அருகே சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கத்தை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

 

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே முடுக்கலான்குளத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கம் மற்றும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சொந்த செலவில் ரூபாய் 50 ஆயிரம் மதிப்பில் சிசிடிவி கேமராவை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

 

 

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் வண்டானம் கருப்பசாமி,அன்புராஜ், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார்,நகர மன்ற உறுப்பினர் கவியரசன்,அம்மா பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன்,அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் சாமிராஜ்,

 

 

அம்மா பேரவை ஒன்றிய இணைச் செயலாளர் வெள்ளப் பாண்டியன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை கிளைச் செயலாளர் செந்தூர்குமார்,  கிளைச் செயலாளர் பாலகிருஷ்ணன்,மகளிர் அணி ஒன்றிய செயலாளர் செல்லத்தாயி,மற்றும் அதிமுக நிர்வாகிகள் முருகன்,கோபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS