ஸ்ரீ ஹரிஹர புத்ர ஐயப்ப சேவா சங்கம் சார்பில் கன்னி பூஜை மற்றும் அன்னதானத்தை கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.
கோவில்பட்டியில் ஸ்ரீ ஹரிஹர புத்ர ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 17 ஆம் ஆண்டு கூட்டு கன்னி பூஜை மற்றும் மண்டல பூஜை அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஸ்ரீ ஹரிஹர புத்ர ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 17 ஆம் ஆண்டு கூட்டு கன்னி பூஜை மற்றும் மண்டல பூஜை அன்னதானம் நிகழ்ச்சி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோயில் அருகே தனியார் திருமணத்தை வைத்து குருசாமி தலைமையில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் விஜய பாண்டியன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, அவை தலைவர் அப்பாசாமி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகர்மன்ற உறுப்பினர் செண்பகமூர்த்தி, முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, மனோகரன், முருகன், கோபி பழனி குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.