BREAKING NEWS

சின்னாளப்பட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் 10 பேர் பேரூராட்சி மன்ற அலுவலக வாயில் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டம்

சின்னாளப்பட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் 10 பேர் பேரூராட்சி மன்ற அலுவலக வாயில் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டம்

சின்னாளப்பட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் 10 பேர் பேரூராட்சி மன்ற தலைவர் ராஜினாமா செய்ய வேண்டும். அல்லது பத்து கவுன்சிலர்களும் ராஜினாமா செய்யப் போவதாக பேரூராட்சி அலுவலக வாயில் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பேரூராட்சியில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 18 வார்டுகள் உள்ளன 18 வார்டுகளிலும் 11 திமுக கவுன்சிலர்களும் ஒரு சுயேட்சை கவுன்சிலரும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

 

 கவுன்சிலர் கூட்டம் மன்ற தலைவர் பிரதீபா தலைமையில் நடைபெறுவதாக வார்டு கவுன்சிலர்களுக்கு அஜெண்டா அனுப்பப்பட்டது. கூட்டம் 11 மணிக்கு தொடங்கும் என அஜண்டாவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை அடுத்து பேரூராட்சி மன்ற தலைவர் பிரதீபா, செயல் அலுவலர் நந்தகுமார் கூட்டரங்கிற்க்கு வந்தனர்.

 

இவர்களை தொடர்ந்து இரண்டு பெண் கவுன்சிலர்கள் மற்றும் ஒரு ஆண் கவுன்சிலர் மட்டுமே 11 மணிக்கு கூட்டத்திற்கு கூட்ட அரங்கினுள் வந்தனர். மற்ற 14- கவுன்சிலர்கள் கூட்ட அரங்கினுள் வரவில்லை. 11.20- மணி வரையில் மற்ற கவுன்சிலர்கள் யாரும் வராததால் பேரூராட்சி தலைவர் பிரதீபா கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக கூறி விட்டு அரங்கில் இருந்து வெளியேறினார். பின்னர் 11:40 மணி அளவில் மற்ற 10 கவுன்சிலர்களும் கூட்ட அரங்கினுள் வந்தனர்.

 

இதனை அடுத்து பேரூராட்சி மன்ற தலைவர், செயல் அலுவலர் என யாரும் அரை மணி நேரமாக கூட்ட அரங்கிற்கு வரவில்லை எனக் கூறி அலுவலக வாயில் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

செயல் அலுவலர் நந்தகுமார் தர்ணாவில் அமர்ந்த கவுன்சிலர்களிடம் பேசியதில் சமாதானம் அடையாத கவுன்சிலர்கள் இது, குறித்து கவுன்சிலர்கள் தெரிவிக்கையில் கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதற்கான காரணம் தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை எனவும்,

 

கூட்டத்தின் வரவு செலவு பதிவேட்டினை பார்வையிடும் பொழுது அலுவலக உதவியாளர் வந்து நீங்கள் பதிவேட்டினை பார்க்க கூடாது என கூறி அதனை பிடுங்கி சென்றதாகவும், கவுன்சிலர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை எனக் கூறி அலுவலக வாயிலில் பேரூராட்சி தலைவர் தங்களுக்கு முறையான பதில் அளிக்கும் வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

தொடர்ந்து பேரூராட்சி மன்ற தலைவர் கவுன்சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தாததையடுத்து பேரூராட்சி மன்ற தலைவர் பிரதீபா ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் நாங்கள் பத்து கவுன்சிலர்களும் ராஜினாமா செய்யப்போகிறோம் என தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு மேலாக பேரூராட்சி மன்ற வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

ஒரே கட்சியை சேர்ந்த திமுக கவுன்சிலர்கள் அனைவரும் பேரூராட்சி மன்ற தலைவருக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

CATEGORIES
TAGS