திருஆருரான் சர்க்கரை ஆலைக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருஆருரான் சர்க்கரை ஆலைக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அப்போது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருமண்டகுடி திருஆருரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்தும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை 100 கோடி ரூபாய் வட்டியுடன் உடனடியாக வழங்க வேண்டும் விவசாயிகள் பெயரில் வாங்கிய 300 கோடி ரூபாய் தொகையை வங்கியில் செலுத்தி விவசாயிகளை கடன்களில் இருந்து மீட்க வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து 31 வது நாளாக போராடிவரும் விவசாயிகளிடம்,
இதுவரை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தாதை கண்டித்தும், உடனடியாக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தியும் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கையில் கரும்புடன் உதவி ஆட்சியரை முற்றுகையிட்டனர்.
பிறகு கூட்டத்தை புறக்கணித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கோரிக்கை நிறைவேற்றும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரித்தனர்.
அதேபோல கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் நெல் குவின்டாலுக்கு 2500 வழங்குவேன் கரும்பு டன் ஒன்றுக்கு 4000 ரூபாய் வழங்க வேண்டிய என தேர்தல் வாக்குறுதியில் அளித்துவிட்டு தற்போது வரை வழங்காமல் விவசாயிகளை புறக்கணிப்பதாக கூறி தலையில் முக்காடு போட்டு வெளிநடப்பு செய்தனர்.