அரசு உதவி பெறும் பள்ளியின் அருகே உள்ள பெட்டிக்கடைகளில் போதை பொருட்கள் மற்றும் புகையிலைப் பொருட்கள் சோதனை.

திருச்சி, திருவெறும்பூரில் அரசு உதவி பெறும் பள்ளியின் அருகே உள்ள பெட்டிக்கடைகளில் போதை பொருட்கள் மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து மதுவிலக்கு டிஎஸ்பி முத்தரசு தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையை சீரழித்து வருகின்றனர்.
இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு போதை பொருட்கள் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும் பள்ளிகளுக்கு அருகாமையில் போதை மற்றும் புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்கு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் திருவெறும்பூரில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள பெட்டிக்கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் போதைப்பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா என்பது குறித்து திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி முத்தரசு தலைமையில் போலீசார் சோதனைகள் ஈடுபட்டனர்.