திருக்கடையூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.

செய்தியாளர் க. கார்முகிலன்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் ஊராட்சியில் மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேத எம்.முருகன் அறிவுறுத்தலின்படி திருக்கடையூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இதில் கிராம உதவியாளர் உதயகுமார் மாவட்ட குழு உறுப்பினர் துளசிரேகா ரமேஷ்,ஊராட்சி மன்ற துணை தலைவர்,ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மக்கள்நல பணியாளர்கள், ஊராட்சி செயலர், ஊராட்சி மன்ற அலுவலர்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் ஆகியோர் சுகாதார பொங்கல் மற்றும் சமத்துவ பொங்கலை கொண்டாடி வருகின்றனர்.
CATEGORIES மயிலாடுதுறை
TAGS அரசியல்சமத்துவ பொங்கல் விழாதமிழ்நாடுதரங்கம்பாடிதலைப்பு செய்திகள்திருக்கடையூர் ஊராட்சிபொங்கல் திருநாள் விழாமயிலாடுதுறை மாவட்டம்