BREAKING NEWS

கலிங்கப்பட்டியில் சமுதாய வளைகாப்பு நிகழ்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

கலிங்கப்பட்டியில் சமுதாய வளைகாப்பு நிகழ்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா கலிங்கப்பட்டியில் சமுதாய வளைகாப்பு நிகழ்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது விழாவிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் தொடர்ந்து தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசினார் அதன் விவரம் வருமாறு.

 

ஆரம்ப சுகாதார நிலையம் உருவாக காரணமாக இருந்து சுகாதார நிலையம் சீரோடும் சிறப்போடும் எல்லோருடைய பாராட்டையும் ஏன் ஒன்றிய அரசின் பாராட்டையும் தொடர்ந்து பெறக்கூடிய அளவில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கக்கூடிய காரணமான எனது அண்ணன் வைகோ இந்த இடத்திற்கு வந்தாலும் அதை கடக்க கூடிய ஒருவராக நடக்க முடியாது என்றால் ஓடி வந்து நடக்கக் கூடிய அமைச்சர் இந்த மருத்துவமனையை மேம்படுத்த அமைச்சரோடு நானும் உறுதி எடுத்துக் கொள்கிறேன்.

 

நானும் நிச்சயம் அடிக்கடி நினைவுபடுத்தி அதை செயல்படுத்தி தருவதற்கு அத்தனை உதவிகளும் செய்வேன் என்ற உறுதியை உங்களுக்கு அளிக்கிறேன் அண்ணன் வைகோவை பொறுத்தவரை எப்பொழுதுமே எங்கள் மேல் அன்பு மதிப்பு பாசம் என்றும் மாறாது இருக்கக்கூடியவர் ஒரு காலகட்டத்தில் அவரது பேச்சுக்களை கேட்க மாநாடுகளில் காத்திருப்போம்.

 

 

அவர் எப்போது பேசுவார் என்று ஒரு பட்டாளமே எதிர்பார்த்து காத்திருக்கக் கூடிய அந்த நிலை பல பேர்களுக்கு மேடையிலேயே எப்படி பேச வேண்டும் ஒரு கருத்தை மக்களுக்கு எப்படி கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற வகையில் முன்னுதாரணமாக இருப்பவர் அண்ணன் வைகோ.,

 

அவர் மேடையில் பேசும் பேச்சு எப்படி பேச வேண்டும் அதே கருத்தை பாராளுமன்றத்திலே எப்படி எடுத்துரைக்க வேண்டும் என்பதனை அவரிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும் அப்படி எதை செய்தாலும் தொடர்ச்சியாக காரியத்தை எடுத்துக் கொண்டு அது முடிகிற வரை வெற்றி அடையும் வரை அந்தப் பணியை விட்டு விடாமல் துரத்தி துரத்தி வெற்றியடைய கூடியவர் தான் அண்ணன் வை கோ இந்நிகழ்ச்சிக்கு பெரிய தலைவர் எங்களை அழைத்திருக்கிறார்.

 

 

எங்களுடன் யார் வருகிறார்கள் கலிங்கப்பட்டி வரை எப்படி வருகிறீர்கள் என்று தெரிந்து கொண்டு நாம் விழாவிற்கு அழைத்து இருக்கிறோம் அவர்களுக்கு எப்படி அன்பு செலுத்த வேண்டும் மரியாதை செலுத்த வேண்டும் என நினைக்கின்றவர் அவர் எப்படி செய்தாலும் சிறப்பாக செய்யக்கூடியவர் தான் இவர் தான் அதற்கான உதாரணம் இந்த ஆரம்ப சுகாதார நிலையம் ஒரு ஏக்கரில் அமைந்தால் போதாது எதிர்காலத்தில் அதை மேம்படுத்த வேண்டும் என்றால் ஐந்து ஏக்கர் நிலம் வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு தன்னுடைய 5 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்தவர்.

 

அதைத் தாண்டி எங்களை அழைத்துக் கொண்டு வந்து காட்டும் போது ஒவ்வொரு அறையும் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது எல்லா வசதிகளும் இருக்கக்கூடிய இடமாக தூய்மையாக இருக்கக்கூடிய இடமாக இருக்கிறது.

இங்கு பணியாற்றும் பணியாளர்கள் மருத்துவர்கள் அனைவரையும் தெரிந்து கொண்டு ஒவ்வொரு நாளும் அவர்கள் என்னென்ன பணிகள் செய்கிறார்கள் என தெரிந்து கொண்டு என்ன நடக்கிறது என்பதை ஆழ்ந்து தெரிந்து வைத்துக் கொண்டு இருக்கிறார்.

 

 

எங்களைப் போன்றவர்களுக்கு எப்படி பணியாற்ற வேண்டும் என்ற உதாரணத்திற்கு இவர் சாட்சி தலைவர் கலைஞரை எடுத்துக் கொண்டால் வேறு யாரையும் நம்பி முழுவதுமாக பணியினை ஒப்படைக்க மாட்டார் தொடர்ந்து முடிக்கப்படும் வரை ஆய்வு செய்து கொண்டே இருப்பார்.

 

அந்த வழியில் வந்தவர் தான் தலைவர் வைகோ அவர்கள் தலைவர் கலைஞரால் போர்வாள் என பாராட்டப்பட்டவர் வைகோ தான் எடுத்துக் கொண்ட காரியத்தை ஆய்வு செய்து தரம் குறையாமல் இருக்க வேண்டும் என்பதில் முன்னோடியாக திகழ்ந்தவர் நிச்சயமாக நாங்களும் இதுபோன்று செயல்படுவோம் என்று உறுதி கூறுகிறோம்.

 

தென்காசி மாவட்டத்திற்கு மட்டும் 50 கோடி அளவில் மருத்துவ கட்டமைப்புகள் மேம்படுத்தப்படு உள்ளது என்று அமைச்சர் அறிவித்திருக்கிறார் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் ஏனெனில் கடந்த 10 வருடங்களாக தென் மாவட்டங்கள் கடந்த ஆட்சியாளர்களால் திரும்பி கூட பார்க்கப்படவில்லை நிராகரிக்கப்பட்ட மாவட்டங்களாக தென் மாவட்டங்கள் இருந்திருக்கின்றன அதை இங்கு இருக்கக்கூடிய மக்கள் பிரதிநிதிகள் ஏற்றுக் கொள்வார்கள் அந்த அளவிற்கு கடந்த காலத்தில் தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

 

மருத்துவ கட்டமைப்புக்கு 50 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பது வரவேற்பதற்கான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மருத்துவக் கல்லூரி வேண்டும் என்ற திட்டத்தை தலைவர் கலைஞர் அறிவித்தார் அந்தத் திட்டம் கிராமத்தில் இருக்கக்கூடிய கடைக்கோடி கிராம மக்களும் துவ படிப்பு படித்து பயன்பட வேண்டும் அப்படி படித்து பயன்பட்டால் தான் அவர்கள் சொந்த ஊர்களில் இருந்து பணியாற்றும் ஒரு மகிழ்ச்சியான வாய்ப்பு கிடைக்கும் என தலைவர் கலைஞர் விரும்பினார்.

 

நகர்ப்புறங்களில் பிறந்து வளர்ந்தவர்கள் படித்தால் அடுத்த விமானத்தை பிடித்து வெளிநாடுகளுக்கு சென்று விடுவார்கள் அதனால் மக்களுக்கு மருத்துவம் கிடைக்காது போய்விடும் எனவே தான் கிராமத்தில் இருக்கக்கூடிய மாணவர்களும் மருத்துவ கல்லூரி கல்வி பயில வேண்டும் என தலைவர் கலைஞர் விரும்பினார்.

 

ஒன்றிய அரசு அப்படி கிராமத்து பிள்ளைகளும் கடைக்கோடி சாதாரண குடும்பத்து பிள்ளைகளும் படிக்க வேண்டும் என விரும்பிய அந்த மருத்துவ கல்லூரி படிப்பினை ஒன்றிய அரசு திட்டமிட்டு பறித்து விட்டது அந்த மருத்துவக் கல்லூரி படிப்பினை மீண்டும் பெற்றுத்தர தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் முயன்று வருகிறார் அதில் விரைவில் வெற்றி பெறுவார் என நம்புகிறோம்.

 

கலைஞர் ஆட்சியில் தான் வருமுன் காப்போம் திட்டம் கொண்டுவரப்பட்டது மக்களுக்கான மருத்துவம் திட்டத்தை தந்தார் தளபதி ஆட்சியில் வீடு தேடி மருத்துவம் இப்பொழுது வீட்டிற்கு மருத்துவம் வந்து கொண்டிருக்கிறது.

 

இது போன்ற திட்டங்கள் கியூபா போன்ற நாடுகளில் தான் பார்க்க முடியும் இன்று தமிழ்நாட்டில் அதை செய்து காட்டியிருப்பவர் தளபதி மு க ஸ்டாலின் ஆட்சியில் தான் திமுக ஆட்சியில் தான் எல்லோருக்கும் மருத்துவம் வசதி கிடைத்திட சுகாதார வசதி கிடைத்திட சமூக பாதுகாப்பு கிடைத்திட தொழில்துறை திட்டங்கள் கிடைத்திட மொழி காத்திட நாம் தொடர்ந்து போராடுவோம் அதற்கு அண்ணன் வைகோ தொடர்ந்து உறுதுணையாக இருப்பார் என நம்புகிறேன்.

 

 

CATEGORIES
TAGS