BREAKING NEWS

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அச்சம்பட்டி பள்ளிக்கூட தெருவை சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் முல்லை வேந்தன் இவர் சங்கரன்கோவில் அருகே உள்ள கல்லூரியில் பயின்று வருகிறார்.

 

இந்நிலையில் மாணவர் முல்லைவேந்தன் குடி போதைக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கம் எனக் கூறப்படுகிறது தினமும் குடித்துவிட்டு வருகிறாய் என வீட்டில் கண்டித்ததாகவும் இதனைத் தொடர்ந்து விரக்தி அடைந்து நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத போது சேலையை கழுத்தில் கட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

 

மாலையில் வீட்டிற்கு வந்த பெற்றோர் கதவு பூட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர் அப்போது மாணவர் முல்லைவேந்தன் தூக்கில் தொங்கியதை கண்டு அலறினர்.

 

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தாலுகா காவல் நிலைய போலீசார் அச்சம்பட்டி விரைந்து சென்று மாணவன் முல்லைவேந்தன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS