BREAKING NEWS

54 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கும்பகோணம் மற்றும் தஞ்சையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

54 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கும்பகோணம் மற்றும் தஞ்சையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

தஞ்சை மாவட்டம் திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை 112 கோடியை உடனே வழங்க வேண்டும் 6000 விவசாயிகள் பெயரில் 12 வங்கிகளில் அந்த ஆலை வாங்கி உள்ள போலியான கடன் சுமையிலிருந்து.

 

 

விவசாயிகளை விடுவிக்க கோரி ஆலை முன்பு கடந்த ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி தொடங்கிய விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் இன்று 54 வது நாளாக நீடிக்கிறது.

 

இந்த போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கும்பகோணம் காந்தி பூங்கா தஞ்சாவூர் பனகல் கட்டிட உள்பட மாநில முழுவதும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

தமிழக அரசு விவசாயிகள் விஷயத்தில் மெத்தன போக்கை கடைபிடிப்பதாக குற்றம் சாட்டிய விவசாயிகள் கடும் கண்டனங்களையும் தெரிவித்தனர்.

 

CATEGORIES
TAGS