பொதிகை அறக்கட்டளையின் 26வது ஆண்டு தொடக்கவிழா..!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அன்னை லோகாம்பாள் தவமையத்தின் 26வது ஆண்டு தொடக்கவிழா பொதிகை அறக்கட்டளையின் செயலாளர் பேராசிரியர் K.A.இராஜன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
தலைவர் டாக்டர் அருள்நிதி G.S.R.பூமிபாலகன் தொலைபேசி மூலம் வாழ்த்துரை தெரிவித்தார்கள். து/ பே கோமதி டீச்சர் குருவணக்கம் பாட து/ பே ராமலெட்சுமி தவம் நடத்த து/ பே நடராஜன் வரவேற்புரை வழங்கினார்.
பேராசிரியர் இராஜன் ஐயா தலைமையுரை வழங்கினார்.அறக்கட்டளையின் பொருளாளர் பேரா. சுப்புராஜ் ஐயா, பேரா. முருகானந்தி அம்மா, பேரா. தம்பிராட்டி அம்மா, பேரா. வெங்கடேஷ் மற்றும் அ/ நி மீனா அம்மா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பேரா இந்திரா அம்மா அவர்கள் சிறப்புரை ஆற்றினார். து/ பே நடராஜன் ஐயா நன்றியுரை வழங்க, அறிவு த்திருக்கோயில் பொறுப்பாளர் பேராசிரியர் இராசமாணிக்கம் ஐயா அவர்கள் அறிவிப்புகள் சொல்ல உலக நல வாழ்த்துடன் விழா சிறப்பாக முடிந்தது. 60 அன்பர்கள் கலந்து கொண்டனர்.