ராணிப்பேட்டை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில்; வாலிபால் பயிற்சி முகாம் நிறைவு முன்னிட்டு சான்றிதழ் வழங்கும் விழா.

ராணிப்பேட்டை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் வடக்கு மாவட்டங்களுக்கான வாலிபால் பயிற்சி முகாம் நிறைவு முன்னிட்டு சான்றிதழ் பரிசு வழங்கும் விழா சோளிங்கரில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வாலிபால் சங்க மாவட்ட தலைவர் அருன்ஆதி தலைமை தாங்கினார்.
செயலாளர் பாண்டியராஜ் வரவேற்றார். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன் மாவட்ட துணைச் செயலாளர் சிவானந்தம், எஸ்ஐக்கள் மோகன்ராஜ், மோகன், சோமசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் அந்தோனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மாவட்ட வாலிபால் சங்க கௌரவ தலைவர் மற்றும் திமுக மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளருமான வினோத் காந்தி கலந்து கொண்டு வாலிபால் போட்டியில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பாராட்டி பேசினார்.
இதில் ராணிப்பேட்டை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பிரேம் ஆனந்த், வாலிபால் சங்க சேர்மேன் கமல ராகவன், வேலூர் மாவட்ட தலைவர் தியாகச் சந்தன், செயலாளர் லட்சுமணன்,
ராணிப்பேட்டை மாவட்ட துணைத் தலைவர் ரவிச்சந்திரன் பொருளாளர் முரளி ஒருங்கிணைப்பாளர் செந்தில் இணை ஒருங்கிணைப்பாளர் கார்த்தி சோளிங்கர் நகராட்சி கவுன்சிலர்கள் அன்பரசு, ராதா வெங்கடேசன் ,சரத்பாபு லோகேஸ்வரி உட்பட விளையாட்டு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.