BREAKING NEWS

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, தாலுகா அலுவலகம் எதிரே சமூக மாற்றம் என்கிற மாத இதழ் நிருபராக உள்ள பசவராஜ் என்பவர் அலுவலகத்திற்குள் வெள்ளிக்கிழமை மாலை நுழைந்த மர்மநபர் கத்தியால் சரமாரியாக வெட்டியதில் பசவராஜ் முதுகு, இடது கை, விரல்களில் பலமாக வெட்டு காயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்..

 

இதுக்குறித்து ஒசூர் நகர போலிசார் சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு பஸ்தலப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சிவக்குமார்(23), கர்நாடகா மாநிலம் பங்கார்பேட்டை பகுதியை சேர்ந்த வெங்கடேஷ்(19) ஆகிய இருவரை கைது செய்துள்ளனர்..

 

கைது செய்யப்பட்டவர்களிடம் போலிசார் நடத்திய விசாரணையில் பசவராஜூம், சிவக்குமாரும் பஸ்தலப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள்

 

பசவராஜூக்கு 1 ஏக்கர் நிலம் உள்ளநிலையில், அருகிலேயே சிவக்குமாருக்கு 3.75 ஏக்கர்கள் நிலம் இருந்து வருகிறது.. பசவராஜ் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சிவக்குமாருக்கு தெரியாமல் பசவராஜ் பெயரிலேயே பட்டா மாறுதல் செய்து அபகரித்துள்ளதாக கூறப்படுகிறது..

 

இதுக்குறித்து சிவக்குமார் ஊரில் பெரியோர் முன்னிலையில் பஞ்சாயத்து செய்தபோதும், பசவராஜ் நிலத்தை எழுதி கொடுக்காததால்

 

பங்கார்பேட்டை பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரிடம் விபரத்தை கூறி, தீர்த்து கட்ட முடிவு செய்து கடந்த வெள்ளிக்கிழமை கத்தியுடன் வந்ததாகவும் அலுவலகத்திற்கு நுழைந்தபோது கத்தி கீழே விழுந்ததால் பசவராஜ் சுதாரித்துக்கொண்டதால் வெட்டு காயங்களுடன் தப்பியதாக கூறி உள்ளனர்..

 

சிவக்குமார், வெங்கடேஷ் ஆகிய இருவரை போலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறைக்கு அழைத்து சென்றனர்

CATEGORIES
TAGS