BREAKING NEWS

8ம் வகுப்பு தோழியை கட்டிப்போட்டு பலாத்காரம் செய்த 4 மாணவர்கள்!

8ம் வகுப்பு தோழியை கட்டிப்போட்டு பலாத்காரம் செய்த 4 மாணவர்கள்! பெற்றோர்களே உஷார்!!

ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள் ஒன்று சேர்ந்து, தங்களது வகுப்பு தோழியைக் கட்டிப் போட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் சென்னையை அதிர செய்துள்ளது. பெற்றோர்களே உஷாராக இருங்க.. வகுப்பு நண்பர்கள் தானே என்று நம்பி விட்டதற்கு அவர்கள் வெறித்தனமாக செய்த செயல் பல பெற்றோர்களை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் 8-ம் வகுப்பு மாணவியை கட்டிப் போட்டு, உடன் படிக்கும் 4 மாணவர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகளுக்கு 15 வயதும், 2வது மகளுக்கு 13 வயதும், 3வது மகளுக்கு 11 வயதும் ஆகிறது. இவர்கள் மூவரும் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களின் தாய் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிகிறார்.

 

அவரது 2-வது மகளான 13 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அவருடன் படிக்கும் சக மாணவர்கள் 4 பேரும் அந்த மாணவியிடம் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். 4 மாணவர்களும், மாணவியின் வீட்டுக்குச் சென்று படிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த 4 மாணவர்களும் மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவை உள் பக்கமாக பூட்டிக் கொண்டு மாணவியைக் கட்டிப் போட்டனர். பின்னர் 4 பேரும் சேர்ந்து மாணவியிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சல் போட்டார். இதையடுத்து 4 மாணவர்களும் இது குறித்து யாரிடமாவது சொன்னால் உன்னை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்து சென்றிருக்கின்றனர்.

தனக்கு நேர்ந்த இந்த கொடுமையை மாணவி யாரிடமும் சொல்லாமலேயே இருந்தார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி, தனது தங்கையிடம் நடந்த விஷயத்தைத் தெரிவித்துள்ளார். இதன் பின் தாய்க்கு இந்த விஷயம் தெரிய வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சிடைந்த தாய், பள்ளி தலைமை ஆசிரியரிடம் முறையிட, அவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் படி அறிவுறுத்தினார். இது தொடர்பாக மாணவியின் தாய், ராயபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின், 4 மாணவர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் காசிமேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )