பழனி முருகனை குடும்பத்துடன் தரிசித்த நடிகர் சிவகுமார்!

பழனி மலைக்கோயிலில் நடிகர் சிவகுமார் மற்றும் அவரது மகன் கார்த்தி ஆகியோர் குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

பிரபல நடிகரான சிவகுமார் தனது குடும்பத்தினருடன் பழனி மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக இன்று திண்டுக்கல் மாவட்டம், பழனி வந்தார். சிவகுமார், மின் இழுவை ரயில் மூலம் மலைக்கு சென்றார். அவரது மகனும் நடிகருமான கார்த்தி படிப்பாதை வழியாக மலைக் கோயிலுக்குச் சென்றார். காலையில் விஸ்வரூப அலங்காரத்தில் இருந்த முருகனை குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தனர். அப்போது, மலைக் கோயிலில் இருந்த பக்தர்கள் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized
TAGS சினிமா
