ராமேஸ்வரம் டு இலங்கைக்கு சென்ற கஞ்சா… நடுக்கடலில் நடந்த கடத்தல்.

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்தி செல்லப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான 225 கிலோ கஞ்சா பார்சல்களை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். நடுக்கடலில் கஞ்சா கடத்தப்பட்டது கடற்படையினரை அதிரவைத்துள்ளது.

இலங்கை வடமத்திய கடற்படை பிரிவை சேர்ந்த கடத்தல் தடுப்பு பிரிவினர், தலைமன்னார் கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். தலைமன்னார் தேவம்பிடி கடற்கரை பகுதியில் இவர்கள், ஒரு படகை சோதனை செய்தனர். படகின் வலைக்கு அடியில் 99 கஞ்சா பார்சல்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. படகுடன் 225 கிலோ எடையுள்ள கஞ்சாவை கைப்பற்றிய கடற்படையினர் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Uncategorized
