BREAKING NEWS

படியில் பயணம்.. நொடியில் மரணம்..!! ஆபத்தை உணராத கல்லூரி மாணவர்கள்..!! அரசுக்கு வைக்கும் முக்கிய கோரிக்கைகள்..!

படியில் பயணம்.. நொடியில் மரணம்..!! ஆபத்தை உணராத கல்லூரி மாணவர்கள்..!! அரசுக்கு வைக்கும் முக்கிய கோரிக்கைகள்..!

 

சேலம் மாவட்டம், எடப்பாடியில் இருந்து சங்ககிரி செல்லும் பிரதான சாலையில் கோணமோரி பகுதியில் அரசு கல்லூரி அமைந்துள்ளது. இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

 

இந்நிலையில், கல்லூரிக்கு சென்றுவர போதிய பேருந்து வசதி இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

 

இதனால், கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் படியில் நின்று பயணம் செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது.  இவ்வாறு பயணம் செய்யும்போது தவறி விழுந்து விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

எனவே, தாங்கள் கல்லூரிக்கு சென்றுவர போதிய போக்குவரத்து வசதியினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

மேலும், கல்லூரி மாணவர்கள் பேருந்து படியில் நின்று பயணம் செய்யக் கூடாது என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அறிவுரை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )