அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் வழக்கு திடீர் ரத்து: காரணம் என்ன?

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் புகாரைத் திரும்பப் பெறுவதாக நடிகை சாந்தினி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். இவருக்கு எதிராகச் துணை நடிகை சாந்தினி என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், அமைச்சர் மணிகண்டனும் நானும் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே வீட்டில் கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்தோம். கருவுற்ற என்னை மிரட்டி பலமுறை கருவைக் கலைக்கச் செய்துள்ளார். இந்த நிலையில் என்னைத் திருமணம் செய்ய மறுக்கிறார். அவரும் நானும் சேர்ந்து இருந்த ஆபாசப் படங்களை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டுகிறார்” எனத் தெரிவித்திருந்தார்.
CATEGORIES Uncategorized