அத்தாணி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

அத்தாணி வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் சக்தி கிருஷ்ணன் தலைமையில் இன்று 189 மையங்களில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது இம்முகாமில் அத்தாணி சின்னத்தம்பி பாளையம். எண்ணமங்கலம். பர்கூர். ஓசூர். ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மருத்துவ முகாமில் 931 நபர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
இம்மருத்துவ முகாமில் எண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சதீஷ்குமார் அத்தாணி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சங்கீதா மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினார்கள்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
