BREAKING NEWS

அனந்தமங்கலம் ஆஞ்சநேயருக்கு தை அமாவாசையையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

அனந்தமங்கலம் ஆஞ்சநேயருக்கு தை அமாவாசையையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அனந்தமங்கலம் கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில் உள்ளது.

 

இக்கோயிலில் ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ வீரஆஞ்சநேயர் மூன்று கண்களையும், பத்துக் கரங்களையும், அந்தக் கரங்களில் எல்லாம் சங்கு, சக்கரம், வில், அம்பு, சூலம் போன்ற ஆயுதங்களை ஏந்தி, முதுகின் இருபக்கமும் கருடனுக்குரிய சிறகுகளோடு காட்சித் தருகிறார்.

 

 

இதுபோன்ற ஆஞ்சநேயர் திருமேனி இங்கு மட்டுமே உள்ளது. இத்தகைய சிறப்பு மிக்க அனந்தமங்கலம் ஸ்ரீ திரிநேத்ர தச புஜ வீர ஆஞ்சநேய சுவாமி கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு ஆஞ்சநேய சுவாமியை கோயில் மண்டபத்தில் எழுந்தருள செய்து சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

 

 

தொடர்ந்து ஆஞ்சநேய சுவாமிக்கு துளசி, வெற்றிலை, எலுமிச்சை மற்றும் வடைகளால் மாலைகள் அணிவித்து பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

 

 

ஆஞ்சநேயர் சுவாமி முத்துச்சட்டை அங்கியில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.

 

CATEGORIES
TAGS