அப்தமித்ரா – பேரிடர் கால நண்பன் நான்காவது கட்ட 12 நாள் சிறப்பு பயிற்சி ரெட்கிராஸ் பேரிடர் மேலாண்மை பயிற்சி மையத்தில் இன்று தஞ்சையில் துவங்கப்பட்டது.

தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் அப்தமித்ரா – பேரிடர் கால நண்பன் நான்காவது கட்ட 12 நாள் சிறப்பு பயிற்சி ரெட்கிராஸ் பேரிடர் மேலாண்மை பயிற்சி மையத்தில் இன்று துவங்கப்பட்டது.
இப்பயிற்சியினை தஞ்சாவூர் பேரிடர் வட்டாட்சியர் திருமதி. ராஜேஸ்வரி முன்னிலையில் கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் டாக்டர். ராதிகா மைக்கேல் அவர்கள் துவக்கி வைத்தார்.
இப்பயிற்சியில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த 9 தாலுக்காவிலிருந்து 30 தன்னார்வலர்கள் பங்கேற்றுள்ளனர். இப்பயிற்சி 08.10.22 முதல் 19.10.22 வரை 12 நாட்கள் நடைபெறும்.
இப்பயிற்சியில் தினசரி மாநில அளவில் சிறந்த பயிற்சியாளர்கள் கொண்டு பேரிடர் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு குறித்து செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்நிகழ்வில் ரெட்கிராஸ் மாவட்ட பொருளாளர் பொறியாளர். முத்துக்குமார், ரெட்கிராஸ் நிதி குழு தலைவர் திரு. ஜெயக்குமார், ஜூனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் திரு. பிரகதீஷ், பேரிடர் மைய என்.ஜி.ஓ ஒருங்கிணைப்பாளர் திரு ஜான் ஆண்ட்ரூஸ் உள்ளிட்ட கலர் கலந்து கொண்டனர்.