அரசு பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் மரம் நடு விழா கொண்டாட்டம்.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர்மன்ற மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரம் நடு விழா பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது.
மரம் நடு விழாவில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் முனைவர் திரு எஸ் எஸ் சோமசுந்தரம் அவர்கள் தலைமை தாங்கி மரக்கன்று நட்டார்.
நிகழ்ச்சியில் அப்பள்ளியின் உடைய முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதுகலை பொருளாதார ஆசிரியர் திரு பொன்னுச்சாமி மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.
CATEGORIES Uncategorized
