அரசுப் பணியை தமிழக இளைஞர்களுக்கு முழுமையாக வழங்கக் கோரி – AIYF அமைப்பினர் திருச்சியில் ரயில் மறியல் போராட்டம்.

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட குழு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் பல்வேறு பணி மாநகர் மாவட்ட செயலாளர் ஒரு வழக்கறிஞர் செல்வகுமார் தலைமையில்
நடைபெற்றது.

முற்றுகை போராட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு பணியிடங்களில் தமிழக இளைஞர்களுக்கு 90% வேலைவாய்ப்பு வழங்க கோரியும், தமிழ்நாடு அரசு பணி இடங்களை தமிழக இளைஞர்களுக்கு முழுமையாக வழங்க வேண்டும், பகத்சிங் தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், நகர்ப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தை முழுமையாக அமல்படுத்த கோரியும், பெண்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் உத்தரவாதப்படுத்த
வேண்டும் கோஷமிட்டவாறு பேரணியாக வந்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். முற்றுகையிட முயன்றவர்களை மலையாளம் கூடியவர்களாகவும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.


முற்றுகைப் போராட்டத்தில் புறநகர் மாவட்ட பொறுப்பாளர் ராஜ்குமார் மாநகர் மாவட்ட செயலாளர் இப்ராஹிம் மாநகர் மாவட்ட தலைவர் முருகேசன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
