BREAKING NEWS

அரசுப் பேருந்து ஓட்டுனர் நடத்துனர்களுக்கு வசூல்படி இரட்டிப்பு!!!

அரசுப் பேருந்து ஓட்டுனர் நடத்துனர்களுக்கு வசூல்படி இரட்டிப்பு!!!

அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை மே 12ம் தேதி நடத்தப்பட்டது . இந்த பேச்சுவார்த்தையில்  போக்குவரத்துத்துறை அமைச்சர், துறை நிர்வாகிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பேட்டாவை நிர்ணயம் செய்யும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்படி “மாநகர் போக்குவரத்துக் கழக சாதாரண பயண கட்டண பேருந்துகளில் மகளிர் இலவச பேருந்து பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனை ஈடு செய்யும் பொருட்டு ஓட்டுநர், நடத்துநர்கள் பெற்று வந்த வசூல்படி குறையத் தொடங்கியுள்ளது. இந்த தொகையை உயர்த்தி முறைப்படுத்தி வழங்கும் வகையில் சாதாரண கட்டண பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் வசூல்படி இரட்டிப்பாக வழங்கப்படும் என அமைச்சர் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்  அறிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )