ஆண்டிபட்டி அருகே நடுகோட்டை கிராமத்தில் புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த ஒன்றிய குழு தலைவர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே புள்ளிமான் கோம்பை ஊராட்சி நடுகோட்டை கிராமத்தில் 10 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் குழந்தைகளுக்கான அங்கன்வாடிமையம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி ஒன்றிய குழு பெருந்தலைவர் லோகிராஜன் தலைமையிலும் துணை தலைவர் வரதராஜன் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் லோகிராஜன் ரிப்பன் வெட்டி அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் புள்ளிமான்கோம்பை ஊராட்சி மன்றத் தலைவர் தவசி, புள்ளி மான் கோம்பை ஒன்றிய கவுன்சிலர் தர்மராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES தேனி
TAGS அரசியல்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தேனி மாவட்டம்நடுகோட்டை கிராம அங்கன்வாடி மையம்புள்ளிமான் கோம்பை ஊராட்சி