BREAKING NEWS

ஆத்தூர் வருவாய்த்துறை சார்பில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சி

ஆத்தூர் வருவாய்த்துறை சார்பில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சி.

ஆத்தூர் வருவாய்த்துறை சார்பில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சி சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்,


சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பங்கேற்று வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்த பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி முகாமில் மல்லிகரை அரசநத்தம் ஈச்சம்பட்டி சீலியம்பட்டி தாண்டவராயபுரம் உள்ளிட்ட 16 கிராமங்களிலிருந்தும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டா மாறுதல் சமூக பாதுகாப்பு திட்ட பணிகள் மாற்றுத்திறனாளிக்கு இலவச வீட்டு மனை பட்டா உதவித் தொகை கோரும் மனு ஜாதி சான்றிதழ் பிறப்பு இறப்பு உள்ளிட்ட சான்றிதழ் கேட்டு மனுக்களை வழங்கினர்,மேலும் அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் இந்த மனுக்கள் குறித்து உடனடியாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த அந்த துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார், இதில் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சரண்யா,வட்டாட்சியர் மாணிக்கம் மற்றும் வருவாய் துறை, பொதுப்பணித்துறை, ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சி, மின்சாரத்துறை, உள்ளிட்ட அனைத்துத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்களும் பங்கேற்றனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )