இந்திய அரசமைப்பு சட்டம் உருவாக்கத்தில் காங்கிரசின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஆம்பூரில் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்திய அரசமைப்பு சட்டம் உருவாக்கத்தில் காங்கிரசின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இக் கருத்தரங்கத்திற்கு திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் பிரபு தலைமை தாங்கினார் மேலும் மாநில செயலாளர் சாய் வெங்கடேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் மகேஷ் ஆம்பூர் சட்டமன்ற பொறுப்பாளர் ரமேஷ் முன்னிலை வகித்தனர்.
மேலும் இக்கருத்தரங்கத்திற்கு சிறப்பு அழைப்பாளராக வேலூர் மத்திய மாவட்ட தலைவர் சுரேஷ் , ஓய்வு ஆசிரியர் ரத்தினம், வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி கலந்துகொண்டு காங்கிரசின் பங்கு குறித்து சிறப்புரையாக ஆற்றினர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த மாவட்ட நிர்வாகிகள் குமரேசன், வர்தா அர்ஷத், சமியுல்லா, விஜயன், ராஜசேகர்,டாக்டர் கோபி, மின்னூர் சங்கர், மற்றும் ஒன்றிய தலைவர்கள் சுரேந்தர், சங்கர், நகர நிர்வாகிகள் பிரபுதுரை, சலாவுதீன், முனீர், ஜூபேர், விநாயகம்,
இப்ராஹிம், ஜான் கென்னடி, மற்றும் மாவட்ட மகிளா காங்கிரஸ் செயலாளர் முல்லை, நகர மகிளா காங்கிரஸ் பிரபா, மோகனா மற்றும் காங்கிரஸ் கட்சியை சார்ந்த 100க்கும் மேற்பட்டோர் இக்கருத்தரங்கத்தில் கலந்து கொண்டனர். மேலும் இறுதியில் ஆம்பூர் நகர தலைவர் சரவணன் நன்றி உரையாற்றினார்.