ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் அமரர் பாரதரத்னா ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் அமரர் பாரதரத்னா ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மாவட்ட தலைவர் மக்கள் ஜி ராஜன் தலைமையில் கட்சி அலுவலகத்தில் அமரர் ராஜீவ் காந்தி அவர்களின் திருவுருவப்படம் அலங்காரம் செய்யப்பட்டு படத்திற்கு மாலை அணிவித்து பயங்கரவாத ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆர் எம் பழனிச்சாமி அவர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், மாவட்ட பொருளாளர் முத்துக்குமார், வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மொடக்குறிச்சி கிழக்கு கதிர்வேல், மொடக்குறிச்சி வடக்கு ரவி, மொடக்குறிச்சி தெற்கு ஈஸ்வரமூர்த்தி, கொடுமுடி கிழக்கு கோபாலகிருஷ்ணன், மாவட்ட பொதுச்செயலாளர் அக்னி பாலு, இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தளபதி ரமேஷ், பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெரியசாமி, பாண்டியன் பாளையம் சுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் தொடர்ந்து பயங்கரவாத ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.