ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் உட்கட்சி அமைப்பு தேர்தலை ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

ஈரோடு வடக்கு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம், அந்தியூர், அம்மாபேட்டை, பவானி, பவானிசாகர், சத்தி, புளியம்பட்டி, காசிபாளையம்,டி.என்.பாளையம், தாளவாடி, உள்ளிட்ட வட்டாரம், நகர காங்கிரஸ் உட்கட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.
இதில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன்.ஈவேரா, ஈரோடுமாவட்ட தேர்தல் பொருப்பாளர் செரில்பாபு ஆகியோர் கலந்து கொண்டு வேட்பு மனுக்களை வழங்கி தொடங்கி வைத்தார்.
இதில் ஈரோடு வடக்கு மாவட்ட வாட்டாரம், நகர தலைவர்கள் வேட்பு மனுக்களை பெற்று கொண்டனர்.
நிகழ்வில் வடக்கு மாவட்ட தலைவர் எஸ்.வி.சரவணன் தலைமை தாங்கினார் மாநில துணைதலைவர் எல்.முத்துக்குமார், முன்னாள் நகர்மன்ற தலைவர் பி.என்.நல்லசாமி, ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் உதயகுமரன், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில செய்தி தொடர்பாளர் கே.எஸ்.கோதண்டன், மாவட்ட துணை தலைவர்கள் எம்.பிரபாகர், வி.தங்கவேல், கோபி நகர துணை தலைவர் தீபா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.