உடுமலை சாதனை மாணவிக்கு பாராட்டு.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடந்த விழாவில், பன்னிரு திருமுறையில், 18,326 பாடல்களை பண்ணோடு பாடி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற கல்லுாரி மாணவி உமாநந்தினி பாராட்டப்பட்டார்.

கார்த்திகை விழா மன்றம் சார்பில், பிரசன்ன விநாயகர் கோவிலில், வைகாசி கிருத்திகை விழா நடந்தது. விழாவுக்கு மன்றத்தலைவர் ரவீந்திரன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சுந்தரராஜன் வரவேற்றார்.நிகழ்ச்சியில், பன்னிரு திருமுறையில், 18,326 பாடல்களை பண்ணோடு பாடி, இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற கல்லுாரி மாணவி உமாநந்தினி பாராட்டப்பட்டார்.தொடர்ந்து பொற்கிழி கவிஞர் சுந்தரம் ஆன்மிக சொற்பொழிவாற்றினார்
CATEGORIES திருப்பூர்
