BREAKING NEWS

உடுமலையில் தைப்பொங்கலை வரவேற்க உடுமலை நகர மற்றும் கிராம பகுதிகளில் விடிய விடிய ஆர்வத்துடன் கோலமிட்ட பெண்கள்.

உடுமலையில் தைப்பொங்கலை வரவேற்க உடுமலை நகர மற்றும் கிராம பகுதிகளில் விடிய விடிய ஆர்வத்துடன் கோலமிட்ட பெண்கள்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழிக்கேற்ப தை மகளை வரவேற்க உடுமலை நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில் பெண்கள் பல்வேறு வண்ணங்களில் பறவைகள் விலங்குகள் வடிவங்களிலும் அத்துடன் தெய்வங்கள் வடிவங்களிலும் வண்ண கோலமிட்டு வரவேற்றனர்.

 

 

மார்கழி பனியிலும் கிராமத்து பெண்கள் ஆர்வமுடன் வண்ணக்கோலம் இதை பலரும் பார்த்து பாராட்டி சென்றனர். தொடர்ந்து அதிகாலை திருப்பூர், உடுமலை பகுதிகளில் உள்ள கோயில்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்து தைமகளை வரவேற்றனர்.

 

 

உடுமலை ராமசாமி நகர் மற்றும் போடிபட்டி பகுதியில் தைப் பொங்கலை ஒட்டி வீடுகளில் பொங்கல் வைத்து சூரிய வழிபாடு செய்தனர்.
உடுமலை மற்று ம் சுற்றுப்பகுதிகளில் பொங்கல் விழாவை பொதுமக்கள் ஆர்வமுடன் கொண்டாடினர் வீடுகளில் பொங்கல் பானை வைத்து சூரிய பொங்கலிட்டு கரும்பு மற்றும் மஞ்சள் கொத்து பூக்கள் படையலிட்டு சூரியனை வழிபாடு செய்தனர்.

 

உலக மக்கள் நோய் தொற்றிலிருந்து விடுபட்டு சுபிட்சமாக வாழ வேண்டும் என சிறப்பு பிரார்த்தனை செய்து சூரியனை வழிபட்டனர்.

 

CATEGORIES
TAGS