BREAKING NEWS

எஸ்டிபிஐ கட்சியின் கல்லிடைக்குறிச்சி நகர கூட்டம்..

எஸ்டிபிஐ கட்சியின் கல்லிடைக்குறிச்சி  நகர கூட்டம்..

திருநெல்வேலி புறநகர் மாவட்டம் கல்லிடைக்குறிச்சி நகர கூட்டம் நகரத் தலைவர் கலீல் ரஹ்மான், தலைமையில்நடைபெற்றது. நகரச் செயலாளர் சாகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

சிறப்பு அழைப்பாளராக புறநகர் மாவட்ட செயலாளர் கல்லிடை சுலைமான்,
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி தலைவர் செய்யது இப்ராஹிம், மாவட்டவர்த்தக அணி தலைவர் அம்பை ஜலில், ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

 

 

மேலும் கூட்டத்தில் கிழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கல்லிடை வார்டு எண்12 கவுன்சிலர்மறு தேர்தல் வைப்பதற்குAD சந்தித்து மனு கொடுக்க வேண்டும். கல்லிடைக்குறிச்சி மின்சார வாரிய அதிகாரிகள் சந்தித்து மின்தடை படுகிறது இதனை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும், கல்லிடைக்குறிச்சி போக்குவரத்து நெரிசலை காரணமாக விபத்துக்கள் ஏற்புடைய சூழல் நிலவி வருகிறது இதனை உடனே சரி செய்ய வேண்டும்.

 

கல்லிடைக்குறிச்சி நகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் உடனே பேரூராட்சி சரி செய்ய வேண்டும், என தீர்மானிக்கப்பட்டது.வருகின்ற பாபரி மசூதி இடிப்பு நாள் டிசம்பர் 6 ஆம் தேதி நடக்கும் கண்டன ஆர்பாட்டத்திற்கு பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

 

இதில் கல்லிடைக்குறிச்சி நிர்வாகிகள் பொருளாளர் நிஜாம், ஆதாம் ரஹ்மத்துல்லாஹ், முஜமில், அப்துல் ஹமீது, கோதரி, இப்ராஹிம், ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் நகர துணை தலைவர் சாதிக், நன்றியுரையாற்றினார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )