BREAKING NEWS

ஏற்காடு அண்ணாமலையார் திரு கோயில் தீப திருவிழா.

ஏற்காடு அண்ணாமலையார் திரு கோயில் தீப திருவிழா.

 

சேலம் மாவட்டம், ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் பிரசித்திபெற்ற அண்ணாமையார் திருகோவில் உள்ளது. இந்த கோயில் சுமார் 250ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

 

 இக்கோவிலில் வருடந்தோரும் கார்த்திகை மாதத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீபதிருநாளில் மகா தீபம் ஏற்றப்படும். அவ்வாறே இந்த ஆண்டும் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்படடது.

 

தீபத்திருநாளான காலை அண்ணாமலையாருக்கும் உண்ணாமலை அம்மனுக்கும் பரணி தீபாராதனை காட்டப்பட்டு அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது பின்பு அங்குள்ள அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. 

 

 

பின்பு இன்று மாலை திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டவுடன் அந்த ஒளி வெளிச்சம் ஏற்காடு அண்ணாமலையார் கோவிலில் தெரிந்தது அதன் பிறகு இங்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. 

 

இந்த கோயில் ஏற்காட்டில் உள்ள 67மலை கிராம மக்களின் பினசித்திபெற்ற கோவிலாகும் இந்த மகா தீபதிருநாளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )