BREAKING NEWS

ஐயப்பன் கோவில் சென்று வந்த வேன் மோதி இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்.

ஐயப்பன் கோவில் சென்று வந்த வேன் மோதி இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிபட்டியை சேர்ந்தவர் மணி என்பவரின் மகன் சூர்யா (23) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த பாண்டியன் என்பரின் மகன் நாகராஜ் (23) இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.

 

இந்த இருவரும் சுருளிப்பட்டியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் சுருளி அருவிக்கு சென்று கொண்டிருக்கும் பொழுது தங்களுக்கு முன்னால் சென்ற பேருந்தை முந்தி செல்ல முற்பட்ட பொழுது சுருளி அருவியில் இருந்து ஐயப்ப பக்தர்களை ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி வந்த வேன் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் தூக்கி எறியப்பட்டனர்.

 

 

இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர் தகவல் அறிந்த பொதுமக்கள் உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல் துறையினர் காயமடைந்த இருவரையும் 108 வாகனத்தின் மூலம் கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

கம்பம் அரசு மருத்துவமனையில் இருவருக்கும் முதலுதவி செய்யப்பட்டது. ஆனால் சூர்யா முதலுதவி பலனின்றி உயிரிழந்தார். பலத்த காயமடைந்த நாகராஜ் மேல் சிகிச்சைக்காக தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 

 

இது குறித்து ராயப்பன்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் ஆகாத இரு வாலிபர்கள் சாலை விபத்தில் ஈடுபட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

CATEGORIES
TAGS