கடலூர் மக்கள் செய்தி தொடர்பு அதிகாரி சுப்பையாவை கண்டித்து கடலூரில் பத்திரிகையாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மக்கள் செய்தி தொடர்பு அதிகாரி சுப்பையாவை கண்டித்து கடலூரில் பத்திரிகையாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்ட மாலை தமிழகம் பத்திரிகையாளர் ராஜதுரையை ஒருமையில் பேசிய மக்கள் தொடர்பு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த போராட்டத்தில் வெட்டவெளிச்சம் மாத இதழ் ஆசிரியர் முத்துக்குமார், மெகா டீவி ஒளிப்பதிவாளர் கங்காதரன், நாளைய தீர்ப்பு இருவார இதழின் உதவி ஆசிரியர் சிவகுமார், இன்றைய தமிழகம் நாளிதழின் புகைப்பட கலைஞர் ரவி, தினப்பார்வை நாளிதழின் மாவட்ட செய்தியாளர் தனசேகர், உள்ளாட்சி நாளிதழின் மாவட்ட செய்தியாளர் செந்தில்,வில்முரசு நாளிதழின் மாவட்ட புரட்சி தலைவி நாளிதழின் ஸ்டில்ஸ்ரவி கணேசன், இன்றைய தமிழகம் நாளிதழின் மாவட்ட செய்தியாளர் ஜெகத் பாரத், இன்றைய தமிழகம் நாளிதழின் குறிஞ்சிப்பாடி தாலுகா செய்தியாளர் முருகானந்தம், வெட்டவெளிச்சம் மாத இதழின் உதவி ஆசிரியர் குமராசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
