களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சி நகர கமிட்டி கூட்டம் நகர தலைவர் கமாலுதின் தலைமையில் நகர அலுவலகத்தில் நடைபெற்றது.

களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சி நகர கமிட்டி கூட்டம் நகர தலைவர் கமாலுதின் தலைமையில் நகர அலுவலகத்தில் நடைபெற்றது.
செயற்குழு உறுப்பினர் முகம்மது ரபிக் வரவேற்புரையாற்றினர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொது செயலாளர் களந்தை மீராசா கலந்து கொண்டு பேசினார். செயற்குழு உறுப்பினர் கபிர், ஆரிப், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் கூட்டத்தில் கிழக்கண்ட் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, களக்காடு கிராமத்தை சுற்றி சுற்று வட்டாரம் முழுவதும் வாழை பயிரிட்ட விவசாய்களின் பருவம் முடிந்து மகசூல் கிடைக்க கூடிய நேரத்தில் இயற்க்கையின் சிற்றம் சூரா வெளி காற்றினால் வாழைகள் சரிந்து விழுந்து விடுகிறது.எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் நிர்வாகம் கருணையின் அடிப்படையில் அவர்களுக்கு வாழைக்கு உண்டான மானியம் வழங்கிட வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டது.
களக்காடு பகுதி நகராட்சி என்ற அந்தஸ்தை பெற்றதால். ஆரம்ப சுகாதர நிலையம் மற்றும் பிரசவ வார்டு கொண்ட மருத்துவமனை பொதுமக்களுக்கு பயன்பெரும் வகையில் அமைக்க வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டது. இறுதியில் நகர செயலாளர் காஜா முகைதின் நன்றி கூறினார்
