காஞ்சிபுரம் அடுத்த சிறுவாக்கம் பகுதியில் விநாயகர், ஷாடசர சண்முகநாதர் ஆலய மகா கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் அடுத்த சிறுவாக்கம் கிராமத்தில் தவத்திரு.சஞ்சீவி இராஜா சுவாமிகளின் ஸ்கந்தாலயா அமைந்துள்ளது.
இங்கு விநாயகர், ஷடாச்ர சண்முகநாதர், வராஹி அம்மன் மற்றும் பாம்பன் ஸ்ரீமத் குமரகுரு தாச சுவாமிகள் ஆலயங்கள் கடந்த நான்கு மாத காலமாக அமைக்கும் பணி நடைபெற்று நிறைவு பெற்றது.
இதனை ஒட்டி மகா கும்பாபிஷேக விழா கடந்த ஒன்றாம் தேதி விநாயகர் பூஜையுடன் தொடங்கி நாள் தோறும் சிவாச்சாரியார்களால் சிறப்பு ஹோம பூஜைகள் நடைபெற்றது.
இன்று காலை ஆறு மணிக்கு நான்காம் நான்காம் கால யாக சாலை பூஜை தொடங்கியது .
இதில் சங்கல்பம், வஸ்திரம் சமர்ப்பிப்பு , பூர்ணாஹீதி என அனைத்து சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டு சிவாச்சாரர்களால் கலச புறப்பாடு நடைபெற்றது.
திருக்கோயில் வலம் வந்து மூலவர் சண்முகநாதன் மகா கோபுரம், பாம்பன் சுவாமிகள் மகா கோபுரம், வராகி அம்மன் கோபுரம் உள்ளிட்டவைகளுக்கு தவத்திரு சஞ்சீவி இராஜா சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.
இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மகா கும்பாபிஷேக விழாவில் சாமி தரிசனம், புனித நீர் தெளித்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
இதன்பின் ஷண்முகநாதர், விநாயகர் வராகி அம்மன் மற்றும் பாம்பன் ஸ்ரீமத் குமரகுரு சுவாமி ஆகிய மூலவர்களுக்கு மகா அபிஷேகம் நடைபெற்று மலர் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது.
இவ்விழாவில் முன்னாள் மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஏ கே மூர்த்தி, பாமக துணை பொது செயலாளரும், முன்னாள் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினருமான திருக்கச்சூர் ஆறுமுகம்,
பாமக மாவட்ட செயலாளர் மகேஷ் குமார், ஆன்மீக அருள்வேந்தர் ராஜேந்திரன், உடையார் சந்திரசேகர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆன்மிக அன்பர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானங்கள் மற்றும் திருக்கோயில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.