BREAKING NEWS

கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன் ஆதரவாளர்களுடன் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன் ஆதரவாளர்களுடன் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையின் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையே போட்டி ஏற்பட்டு இரு அணிகளாக செயல்படும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் நடைபெற்ற பொது குழு கூட்டத்தில் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கு ஆதரிப்பதாக கூறி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால துணைப் பொதுச் செயலாளராக பொதுக்குழு கூட்டத்தில் அறிவித்தனர்.

 

இதனை தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்கி எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டார். இதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அவரது ஆதரவாளர்களை நீக்கி அவரும் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

 

இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி புதிய நிர்வாகிகளை நியமித்து அறிக்கை வெளியிட்டார் ஆனால் ஓ.பன்னீர்செல்வம் அவர் நியமித்த உறுப்பினர்களை . நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்கம் செய்வதாக அறிவித்து புதிய நிர்வாகிகளை அறிவித்தார். அதன்படி கழக துணை ஒருங்கிணைப்பாளராக வைத்தியலிங்கம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளராக முன்னாள் அமைச்சர் கு.பா கிருஷ்ணன் உட்பட பலரை நியமித்து அறிக்கை வெளியிட்டார். இதேபோல கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஓபிஎஸ் அணியில் கட்சியின் கழக அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

 

 

 

மேலும், புதிய திருச்சி மாவட்ட செயலாளர்களையும் நியமித்து ஓ.பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து திருச்சி முழுவதும் புதிதாக பொறுப்பேற்ற கு.பா.கிருஷ்ணன் மற்றும் வெள்ளை மண்டி நடராஜன் ஆகியோரை வாழ்த்தி போஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில் இன்று கு.பா.கிருஷ்ணன் வெல்லமண்டி நடராஜன் தங்களது ஆதரவாளர்களுடன் திருச்சி சிந்தாமணியில் உள்ள அண்ணாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்தனர்.

 

அதனை தொடர்ந்து திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை, கண்டோன்மெண்டில் உள்ள முத்தரையர் சிலை, தொடர்ந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலை, ஜங்ஷன் அரிஸ்டோ ரவுண்டானாவில் உள்ள அம்பேத்கர் சிலை ஆகியவற்றைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கழக துணை ஒருங்கிணைப்பாளர் கு.பா.கிருஷ்ணன் அதிமுக பிளவு பட்டுள்ளதாக எழுப்பிய கேள்விக்கு

 

அதிமுக பிளவு படவில்லை, தொண்டர்களால் மட்டும் பிளவுபடவில்லை. எம்ஜிஆர் கூறினார் அதிமுக பிளவுபடும் நேரத்தில் 80 சதவீத தொண்டர்கள் எங்கே இருக்கின்றனவோ அதுதான் அதிமுக என்றார். அதுதான் எம்ஜிஆர் உடைய டிரஸ்ட்டை பாதுகாக்க வேண்டும், அவருடைய பணத்தைக் கட்சிக்கு செலவிட வேண்டும், ஜானகி அம்மா கொடுத்த கட்டடத்தினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

 

எனவே, எண்பது விழுக்காடு தொண்டர்கள் கொண்ட இயக்கம் எங்கள் இயக்கம் இதுதான் அண்ணா திமுக. தற்போது அமைப்புகள் போடப்பட்டுள்ளது. விரைவில் அதிமுக எங்களது என்பதை உறுதிப்படுத்துவோம். மாநாடு போடுவோம் பொதுக்கூட்டம் போடுவோம் அதில் நாங்கள் உறுதிப்படுத்துவோம். எங்களது நோக்கம் வெற்றி நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. தலைமை கழகத்தில் பல்வேறு கோப்புகள் பொருட்கள் திருடப்பட்டதாக காவல் துறைகள் புகார் அளிக்கப்பட்டு இருந்தது என்ற கேள்விக்கு

 

சொந்த வீட்டுக்காரனுக்கு தான் தெரியும் என்ன இருந்தது, எப்ப எடுத்துட்டு போனோம் என்று சாவி வைத்திருந்த உனக்கு மட்டும் தான் தெரியும். அலுவலகத்தில் செங்கோலை காணவில்லை. வாளை காணவில்லை என கூறுகின்றனர். கொடாட நாட்டு பங்களா உங்களிடம் தானே, போயஸ் கார்டன் உங்களிடம் தானே அங்கு பெருங்காய டப்பா கூட இல்லை.

 

விளக்கமாறாவது இருக்க வேண்டும் அல்லவா அதை யார் எடுத்துக் கொண்டு சென்றார் தெரியவில்லை. பிஜேபி தான் இபிஎஸ்ஸை இயக்குவதாக கூறப்படுகிறது என்று கேள்விக்கு எங்களை இயக்குபவர் ஓ.பழனிச்சாமி தான். அவர்களை யார் இயக்கினால் எங்களுக்கு என்ன என தெரிவித்தார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )