குடியாத்தம் கஸ்பா கங்கையம்மன் தேர் திருவிழா.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் பஸ் கவுதம் பேட்டை கங்கை அம்மன் திருவிழாவை முன்னிட்டு தேர் திருவிழா நடந்தது. திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 31ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று இரவு அம்மனுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்று.
இதனைத் தொடர்ந்து இன்று காலை தேர் திருவிழா நடைபெற்றது விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்து தேரில் வைக்கப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது.
முன்னதாக தேரோட்டத்தை குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன். நகரம் மன்ற தலைவர் எஸ். சௌந்தரராஜன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஊர் நாட்டாமை டாக்டர் ஏ.கென்னடி, துணை நாட்டாமை ஏவி செல்வம்,
நகரம் என்ற உறுப்பினர் எம். கற்பகம் மூர்த்தி, ஊர் கவுரவத் தலைவர் ஆர் மூர்த்தி, ஊர் தலைவர் பி.மேகநாதன், ஒரு செயலாளர் எம். வீராங்கன், ஊர் பொருளாளர். பி.மோகன், நகர மன்ற உறுப்பினர் எம். மனோஜ், டாக்டர்.நாகராஜ், தி.மு.க பிரமுகர்கள் ஜம்புலிங்கம், நாகேந்திரன், பொன் ராஜேந்திரன், கிருஷ்ணவேணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.