BREAKING NEWS

கும்பகோணத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 492 வழக்குகளுக்கு தீர்வு.

கும்பகோணத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 492 வழக்குகளுக்கு தீர்வு.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 492 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் கோர்ட்டுகளில் நேஷனல் லோக்
அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

 

கும்பகோணம் கோர்ட்டில் நடைபெற்ற 2 அமர்வுகளில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. முதல் அமர்வில் கூடுதல் மாவட்ட நீதிபதி சண் முகவேல், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதி பதி புவியரசு, வக்கீல் மாதவன் ஆகியோர் பங்கேற்றனர்.

 

2-வது அமர்வில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சண்முகப்பிரியா, முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி வெங் கடேசபெருமாள். வக்கீல் ரகுவீரன் ஆகியோர் பங்கேற்றனர்.

 

இதேபோல் திருவிடைமருதூர் கோர்ட்டில்மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவர்கள் சிவபழனி, பாரதிதாசன்,வக்கீல் மோகன் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

மொத்தம் 753 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் பல்வேறு வழக்குகள் சம்பந்த மாக, இரு தரப்பினரையும் அழைத்துப்பேசி சமரசமாக முடிக்கப்பட்டது. மேலும் காசோலை வழக்குகள், குடும்ப வழக்குகள், ஜீவ னாம்ச வழக்குகள். சிவில். சிறு குற்ற வழக்குகள், மோட் டார் வாகன விபத்து வழக்கு கள் மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, 492 வழக்குகளுக்கு சட்டப்படியான உடனடி தீர்வு காணப் பட்டது.

 

639-ம், 95 மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள் மூலம் ரூ.1 கோடியே 12 லட் சத்து 58 ஆயிரத்து 478-ம், கடன்தொகை பாக்கி நிறை வேற்று வழக்கில் ரூ.34 லட் சத்து 8 ஆயிரத்து 84 என மொத்தம் ரூ.2 கோடியே 99 லட்சத்து 50 ஆயிரத்து 717 வசூல் செய்ய தீர்வு காணப்பட்டது.

 

மக்கள் நீதிமன்றம் ஏற்பாடுகளை கும்பகோணம் வட்ட சட்டப் பணிகள் குழு வின் நிர்வாக அலுவலர் மற்றும் கோர்ட் அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.

 

CATEGORIES
TAGS