கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு தஞ்சை மாநகராட்சி மேயர் சன்.ராமநாதன் பூ மற்றும் பேனா வழங்கி வரவேற்றார்

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப் பட்டது இதையடுத்து தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் பள்ளிகளுக்கு செல்கின்ற மாணவ மாணவிகளுக்கு தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சன்.ராமநாதன் ரோஜா பூ மற்றும் பேனா வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.


இதையடுத்து தென்கீழ் அலங்கத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு மேயர் பூக்கள் மற்றும் பேனா வழங்கி வரவேற்பதோடு அரசின் இலவச பாடப் புத்தகங்களை வழங்கி தொடங்கி வைத்தார்.
CATEGORIES தஞ்சாவூர்
