கோவில்பட்டி அருகே சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா.!

நீர் மோர் பந்தல் திறப்பு விழா..!
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி கிராமத்தில் நீர் மோர் பந்தல் சிறப்பு விழா நடைபெற்றது.
கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி தலைமையில் சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நீர் மோர் பந்தல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
இவ்விழாவில் கிளைச் செயலாளர் தங்கராஜ், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மிக்கேல், ஒன்றிய மாணவரணி செயலாளர் சொரிமுத்து, ஒன்றிய பொருளாளர் ஈஸ்வரன், கடலையூர் அவைத்தலைவர் பழனிச்சாமி, கடலையூர் ஊராட்சி கழக செயலாளர் முத்துகிருஷ்ணன், கிளைச் செயலாளர் பெரியசாமி, துணைச் செயலாளர் முத்துக்கனி, மாணவரணி செயலாளர் காளிமுத்து,
ஒன்றிய மாணவரணி துணைச் செயலாளர் தங்கமுத்து, கோவில்பட்டி நகர செயலாளர் பழனி முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பூமி பாலன், லிங்கம் பட்டி கிளை செயலாளர் தங்கராஜ், கிளை பொருளாளர் வெள்ள பாண்டி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நீர்மோர் வழங்கினர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.