சிவகங்கையில் காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று நகர்மன்ற தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

செய்தியாளர் வி.ராஜா.
சிவகங்கையில் அரண்மனை வாசலில் காந்தி ஜெயந்தி விழாவை வருதையொட்டி கடந்து சில நாட்களாக மகாத்மா காந்தி திருவுருவச் சிலைக்கு மறுசீரமைப்பு பணிகள் மற்றும் வர்ணம் பூசுதல் போன்ற மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று முடிவடைந்த நிலையில் இன்று தற்போது மகாத்மா காந்தியின் 154 வது பிறந்தநாள் விழா மற்றும் காமராஜர் நினைவு நாள் விழாவை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இன்று அரண்மனை வாசல் முன்பாக அமைந்துள்ள அவர்களது திருவுருவச் சிலைக்கு சிவகங்கை நகர்மன்ற தலைவர் சி எம் துரைஆனந்த் அவர்கள் பூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இவ்விழாவில் நகர் மன்ற துணைத் தலைவர் கார் கண்ணன் அவர்கள் நகர்மன்ற உறுப்பினர்கள் வீனஸ் இராமநாதன், அயூப்கான், சண்முகராஜன், விஜயகுமார், சிஎல் சரவணன், ராமதாஸ், கீதா கார்த்திகேயன், மதியழகன், தொழில்நுட்ப பிரிவு சதிஷ்குமார், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.