“சீருடை பணியாளர் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்!!

வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முத்துசாமி துவங்கி வைத்தார்.
வேலைவாய்ப்புத் துறையின் சார்பில் வடக்கு மண்டல காவல்துறை மற்றும் சீருடை பணியாளர்களின் வாரிசுகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் வேலூரில் நடைபெற்றது.
இதனை வேலூர்சரக காவல்துறை துணை தலைவர் முத்துசாமி குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார். இவ்விழவைல் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரன் ஸ்ருதி உள்ளிட்டோரும் நூற்றுக்கணக்கான காவல்துறை மற்றும் சீருடை பணியாளர்களின் வாரிசுகளும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டனர்.
இதில் கல்வி மட்டும் இருந்தால் போதாது தனிதிறனுடன் செயல்பட வேண்டுமென வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முத்துசாமி விளக்கி பேசினார்.
செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்.
CATEGORIES வேலூர்
TAGS தமிழ்நாடுதலைப்பு செய்திகள்வேலூர் சரக காவல்துறைவேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணாவேலூர் மாவட்டம்வேலைவாய்ப்புத் துறை