சுவாமி விவேகானந்தர் 160 வது பிறந்தநாளை முன்னிட்டு தேசிய இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடப்பட்டது.

மயிலாடுதுறை மத்திய ஒன்றியம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக, சுமார் 30 இடங்களில் சுவாமி விவேகானந்தரின் 160 வது பிறந்தநாள் தேசிய இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக குத்தாலம் கடை வீதியில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவி பட்டாசுகள் வெடித்தும் மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை மத்திய ஒன்றிய தலைவர் TDK.செந்தில் தலைமை வகித்தார்.
மாவட்ட துணைத் தலைவர் ஜெயவரதன் வரவேற்புரையாற்றினார்.தர்மராக்ஷன சமிதி தலைவர் பட்டாபிராமன்.குத்தாலம் மேற்கு ஒன்றிய தலைவர் என்.சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
ஒன்றிய துணைத் தலைவர் வெங்கடேஷ்.பிரச்சார பிரிவு நிர்வாகி மகேந்திரன்.மற்றும் கோவிந்தராஜ் தண்டபாணி தர்மராஜன் ராஜ்குமார் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியின் இறுதியில் ஒன்றிய பொதுச் செயலாளர் எஸ்.கணேசன் நன்றியுரையாற்றி நிறைவு செய்தார்.