சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அரசு துணை சுகாதார நிலையம் அருகில், ஸ்ரீசக்தி சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
இதில் ஒன்றிய செயலாளர்கள் மாவட்ட துணை செயலாளர் மு.ஞானவேலன், ஒன்றிய செயலாளர்கள் அமுர்த.விஜயகுமார், எம்.அப்துல்மாலிக், பி.எம்.அன்பழகன், தரங்கை பேரூராட்சி மன்ற தலைவர் சுகுணசங்கரி குமரவேல்,
நகர திமுக செயலாளர் முத்துராஜா, திருக்கடையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலினி சிவராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் இரா.செந்தில் உரிமையாளர்கள் திருமலைராஜன், சத்தியசீலன் ஆகியோர் உடன் இருந்தனர்.
CATEGORIES மயிலாடுதுறை
TAGS அரசியல்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருக்கடையூர் அரசு துணை சுகாதார நிலையம்பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன்மயிலாடுதுறை மாவட்டம்