செங்கல்பட்டு அருகே போக்சோ வழக்கில் வாலிபர் கைது..
செங்கை ஷங்கர் செங்கல்பட்டு,
செங்கல்பட்டு அடுத்த மேலச்சேரி கிராமம் ஏகாம்பரம் என்பவரது மகன் செல்வராஜ்(25) தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மேலச்சேரி பகுதியில் அவரது வீட்டருகே வசித்து வரும் 10ஆம்வகுப்பு பயின்று வரும் 15வயது சிறுமி தனது அம்மா அப்பா வெளியே சென்றுள்ளதால் தனியாக வீட்டில் இருந்துள்ளார்.
சிறுமி தனிமையில் இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட செல்வராஜ் அத்துமீறி சிறுமியின் வீட்டுக்குள் நுழைந்து சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடிவிட்டார்.
வெளியில் சென்றிருந்த பெற்றோர் வந்தவுடன் சிறுமி தன் தாயிடம் நடந்ததை சொல்லி அழுதிருக்கிறார். உடனே செங்கல்பட்டு மாவட்ட அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த செல்வராஜை கைதுசெய்து போக்சோ வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைத்தனர்.