BREAKING NEWS

செம்பட்டி அருகே போடி காமன் வாடி பிரிவில் தேசிய நெடுஞ்சாலையில் 2 கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து 3 பேர் படுகாயம்.

செம்பட்டி அருகே போடி காமன் வாடி பிரிவில் தேசிய நெடுஞ்சாலையில் 2 கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து 3 பேர் படுகாயம்.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா.

 

சேலத்தில் இருந்து ஐயப்பன் கோயிலுக்கு சென்று கொண்டிருந்த கார் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி வத்தலகுண்டு தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட போடி காமன் வாடி பிரிவில் 26 12 22 இன்று மதியம் 12.30 மணி அளவில் வந்து கொண்டிருந்த போது,..

 

 

எதிரே ஆத்தூர் ஒன்றியம் சுரைக்காய் பட்டியைச் சேர்ந்த அஜய் வயது 19 மற்றும் இருவர் ஆகிய மூன்று பேரும் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

 

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர்.

 

மேலும் விபத்துக்குள்ளான காறை பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்த மற்றொரு காரும் விபத்துக்குள்ளான காரின் பின்பகுதியில் மோதி விபத்தில் சிக்கியது.

 

 

இந்த விபத்தில் இரண்டு கார்களில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த  செம்பட்டி காவல்துறையினர் படுகாயம் அடைந்த மூன்று பேரையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து போக்குவரத்தை சீர்படுத்தினர்.

 

மேலும் செம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

 

CATEGORIES
TAGS